/* */

சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார் அதிரடி

சாம்பவர் வடகரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சிறையில் அடைப்பு

HIGHLIGHTS

சாம்பவர் வடகரையில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது: பாேலீசார் அதிரடி
X

சாம்பவர் வடகரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட முத்தையா என்ற நபரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சிதம் என்ற மூதாட்டி அவரது வீட்டின் வெளியே முற்றம் தெளித்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் தனது செயினை பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார்.

பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சரண்யா மேற்பார்வையில் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி அறிவுறுத்தலின்படி சார்பு ஆய்வாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சாம்பவர் வடகரை இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் முத்தையா என்ற நபரை 24 மணி நேரத்திற்குள் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து பறித்துச் சென்ற தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை உடனடியாக கைது செய்த காவல்துறையினரின் இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் தங்களின் வெகுவாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்

Updated On: 30 Sep 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா