/* */

தென்காசி அருகே ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தென்காசி மாவட்டம சுரண்டை பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ரூ 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா போலீசாரிடம் சிக்கியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சுரண்டை பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆலோசனையின் படி எஸ்ஐ ஜெயராஜ் மற்றும் போலீசார் சுரண்டை அண்ணா சிலை, சங்கரன்கோவில் ரோடு, திருநெல்வேலி ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சேர்ந்தமரத்தில் இருந்து சுரண்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த காரை மறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரூபாய் 1.44 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை கடத்திய செங்கோட்டை எஸ்.ஆர்.கே தெருவைச் சேர்ந்த இசக்கி ராஜ் (28), மணிகண்டன்(31), ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து குட்கா பொருட்களையும், கடத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சுரண்டை பகுதிகளில் குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 18 April 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...