/* */

ஆலங்குளம் அருகே கொடிய விஷப்பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஆலங்குளம் அருகே கொடிய விஷப்பாம்பு கடித்து ஒருவர் உயிரிழப்பு
X

கோப்பு படம் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரி கிராமத்தை சார்ந்தவர் முத்துராஜ் (29),விவசாயி. இவர் நேற்று மதியம் தோட்டத்தில் புல் அறுக்க குடும்பத்துடன் சென்றுள்ளார். புல் அறுத்துக் கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக, கொடிய விஷப் பாம்பு ஒன்று, இவரை கடித்துள்ளது.

உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  3. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  4. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  5. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  8. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  9. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  10. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...