/* */

கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது

கடையம் பகுதிக்கு ஆளுநர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்., கவுன்சிலர் கைது செய்ய்பட்டார்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

ராகுல்காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருவதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மத்திய அரசை கண்டித்து ஆளுநர் அலுவலகம் முன்பு அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை கடையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் போன்ற கிராமங்களில் ஆளுநர் கே.என்.ரவியின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அப்போது கடையத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் என்பவர் நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக ராகுல் காந்தியை மத்திய அரசின் அமலாக்கத்துறை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதாகவும், அதைக் கண்டித்து இன்று கடையம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை ஏந்தி போராட இருப்பதாக காவல்துறையின் தனிப் பிரிவுக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் கடையம் காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால் தலைமையில் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாரி குமாரை இன்று அதிகாலை கைது செய்தனர். இதனால் கடையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Updated On: 18 Jun 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்