/* */

தந்தையின் கல்லறையை தேடி மலேசியாவிற்கு பயணம் செய்த சமூக ஆர்வலர்

தந்தையின் கல்லறையை தேடி மலேசியாவிற்கு சமூக ஆர்வலர் பயணம் செய்து உள்ளார்.

HIGHLIGHTS

தந்தையின் கல்லறையை தேடி மலேசியாவிற்கு பயணம் செய்த சமூக ஆர்வலர்
X

மலேசியாவில் உள்ள தந்தையின் கல்லறையில் சமூக ஆர்வலர் திருமாறன்.

தந்தையின் கல்லறையைத் தேடி சுமார் 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து சென்று பார்த்த சமூக நல ஆர்வலர் பற்றிய தகவல் கிடைத்து உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வெங்கடாம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் சமூக நல ஆர்வலர் திருமாறன். இவர் அப்பகுதியில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். இவரது தந்தை ராமசுந்தரம் என்ற பூங்குன்றன் 1967 ஆம் ஆண்டு மலேசிய நாட்டிலே ஆசிரியராக பணிபுரிந்து மறைந்தார். இறந்த அவருக்கு கல்லறை எழுப்பி விட்டு இந்தியா திரும்பிவிட்டார். அவரது அன்பு மனைவி ராதாபாய். பின்னர் அவரும் இயற்கை எய்தினார்.

தந்தை இறந்து 55 வருடங்கள், தாயார் இறந்து 35 ஆண்டுகள் கழித்த பின்னர் தகப்பனார் கல்லறையைத் தேடி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு திருமாறன் சென்றார். நமது நாட்டில் உறவினர்கள் சந்ததியினரால் பராமரிக்கப்படாத கல்லறைகள் அப்படியே இருக்க வாய்ப்புகள் குறைவு. புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு விடும் அல்லது மண்ணோடு மண்ணாகி விடும். குடியிருப்புகளாக கூட மாறி இருக்கும். ஆனால் மலேசியாவில் கல்லறை அப்படியே இருந்தது. இது தான் அவரது ஆச்சரியத்தின் உச்சம்.

கூகுள் உதவியுடன் கர்லிங் பகுதியில் தேடி பூங்குன்றன் ஆசிரியர் பணியாற்றிய பள்ளி மூலம் அவரது பழைய மாணவ மாணவியரை தேடி அடையாளம் கண்டு கல்லறை அடையாளம் காணப்பட்டது. அவரது கல்லறையில் அவரது பளிங்கு கல் படத்துடன் அப்படியே இருந்தது.

சீனர், மலாய், தமிழ் மக்கள் இணைந்து வாழுகின்ற மலேசியாவில் இந்த மயான தோட்டத்தில் கிறிஸ்தவர், இந்து மக்கள் ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளனர். இப்படி சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தந்தையின் முகமறியாத மகன் திருமாறன் அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது.

தமிழ்நாட்டில் இருந்து விமானத்தில் மலேசியாவுக்கு கொண்டு வந்திருந்த தாயார் ராதாபாய் கல்லறை மண்ணை தந்தை கல்லறையில் மகன் திருமாறன் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தந்தையின் கல்லறையில் உள்ள மண்ணை தாயாரின் கல்லறையில் வைத்துள்ளார். திருமாறன். வாழுகின்ற பெற்றோரை உயிருடன் உள்ள போதும், மறைந்த தாய் தந்தையை மறைவுக்கு பின்னரும் போற்றித் துதிக்க இளைய தலைமுறைக்கு இந்த நூற்றாண்டின் பதிவு ஆக இது உள்ளது.

இதனையறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் பதிவு செய்த வாழ்த்து மடலில், மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் தனது தந்தை இராமசுந்தரத்தின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன். இந்தப் பயணத்தில், திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் முன்னால் இராமசுந்தரம் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரத்தை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே! தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திருமாறன் ஆதரவற்றவராக அல்லாமல் பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே தான் இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்! என கூறியிருந்தார்.

Updated On: 23 Nov 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...