/* */

கள ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்த ஆணையை அமல்படுத்தக்கோரி போராட்டம்

தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இணைப்பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

HIGHLIGHTS

கள ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்த ஆணையை அமல்படுத்தக்கோரி  போராட்டம்
X

கள ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்யும் ஆணை அமல்படுத்தவேண்டும் மாவட்ட அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கூட்டுறவு சங்க கள ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்யும் ஆணையை அமல்படுத்தக்கோரி ரேஷன் கடை பணியாளர்கள் இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இளையான்குடி கூட்டுறவு சங்க கால ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வினோத் ராஜா. இவர் அப்பகுதியில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரை பணியிட மாற்றம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவு சங்கத்தினர் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து அவரது பணி இடமாற்றம் ஆணையை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் பணியிட மாற்ற ஆணையை அமல்படுத்தக்கோரி அதே இணைப்பதிவாளர் அலுவலத்தை முற்றுகையிட்டு சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப வருகின்றனர். மேலும் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இணைப்பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 1 Feb 2022 4:43 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்