Begin typing your search above and press return to search.
துப்பறியும் நாய் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு
குற்றவாளிகளை கண்டறிய உறுதுணையாக இருந்த போலீஸ் துப்பறியும் நாய்களான லைக்கா, ராம்போ மற்றும் அதன் பயற்சியாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கரிகாலன் கொலை வழக்கிலும் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட திருச்சி செல்வம் கொலை வழக்கு ஆகிய இரு கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்த போலீஸ் துப்பறியும் நாய்களான லைக்கா, ராம்போ மற்றும் அதன் பயற்சியாளர்களான காவலர்கள் வீரமணி,வீரக்குமார் மணிமாறன், மற்றும் கோபால் ஆகியோர்களை இன்று (20 ம் தேதி) சிவகங்கை மாவட்ட எஸ்பி., ராஜராஜன் பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.