/* */

தொடர் முகூர்த்தம் எதிரொலி: சிவகங்கை பகுதியில் வாழை விற்பனை அதிகரிப்பு

தொடர் முகூர்த்தம் எதிரொலியாக சிவகங்கை பகுதியில் வாழை விற்பனை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

தொடர் முகூர்த்தம் எதிரொலி: சிவகங்கை பகுதியில் வாழை விற்பனை அதிகரிப்பு
X

பைல் படம்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் முகூர்த்தம் எதிரொலியாக வாழை மரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. சிவகங்கை, மதகுபட்டி, மலம்பட்டி, கலியாந்தூர், நயினார் பேட்டை, திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது.

டிசம்பர் எட்டு, ஒன்பது, பத்து, 13 என தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் வாழை மரம் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு ஜோடி மரம் 200 ரூபா யில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. திருப்புவனம் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாழை மரங்களை மொத்தமாக வாங்கிச் செல்வதால் இப்பகுதிகளில் அறுவடை நடந்து வருகிறது.

இப்பகுதிகளில் முப்பட்டைரக வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. தொடர் மழையால் வாழைக்காய், பழம், இலை ஆகியவற்றின் விலை பெரும்ளவு சரிந்து விட்ட நிலையில், தற்போது வாழை மரங்கள் விற்பனை கைகொடுத்து வருகிறது. கார்த்திகையை தொடர்ந்து தை, மார்கழி என அடுத்தடுத்த மாதங்களில் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.

ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்தாலும் 800 கன்றுகள்தான் விளைச்சலுக்கு வரும். ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தாலும் போதிய அளவு வருவாய் கிட்டவில்லை. பல்வேறு பகுதிகளில் விளைச்சல் அதிகரித்ததால் விலைசரிந்து விட்டது என்றார்.

மேலும் மதுரை மார்க்கெட்டில் திருப்புவனம் பகுதி வாழை மரங்கள், இலைகளுக்கு தனி மவுசு உள்ளது. திருப்புவனம் பகுதி வாழைகள் பத்து நாட்கள் வரை வாடாது என்பதால் பலரும் விரும் புவார்கள். இதனால் விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி மதுரை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

Updated On: 10 Dec 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்