/* */

சிவகங்கை மாவட்டத்தில் பெண்களுக்கான விருதுகள்: ஆட்சியர் தகவல்

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் பெண்களுக்கான விருதுகள்: ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டுவீர தீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும்,ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வெளியிட்ட தகவல்: வருகின்ற ஜனவரி-2024, 24 -ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தின விருதுக்கான பாராட்டுப் பத்திரமும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது.

தேசிய பெண் குழந்தை தின விருதிற்கு சிவகங்கை மாவட்டத்தில், தகுதியினை உடைய 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகின்ற 20.11.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்தல் வேண்டும்.

13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை, பிற பெண் குழந்தை களின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத் தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல்,

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியம் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவைகளுக்கான வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். மேலும், இவை தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

.

Updated On: 5 Nov 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?