/* */

காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை

காரைக்குடி அருகே கண்டனூரில் கணவன் மனைவியை கட்டிப்போட்டு 30 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி

HIGHLIGHTS

காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை
X

காரைக்குடி அருகே கண்டனூரில் 30 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் தெப்பக்குளம் வீதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி (63)ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி விசாலாட்சி.இவர்களுக்கு 2 மகன் ,ஒரு மகள் இருக்கும் நிலையில், அனைவரும் சென்னையில் வசித்து வருகின்றனர். தட்சிணாமூர்த்தியும் அவரது மனைவி விசாலாட்சி இருவர் மட்டும் தனியாக கண்டனூர் பங்களாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் கணவன்,மனைவி இருவரையும் கட்டி போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதிக பரப்பளவு கொண்ட வீடு என்பதால் அக்கம், பக்கத்தினரிடம் உதவி கோர முடியாத நிலையில், கணவன், மனைவி இருவரும் தாங்களாகவே கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, சாக்கோட்டை காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவம் இடம் வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் பணம் நகையை கொள்ளையடித்து சென்ற மூவர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 July 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...