/* */

கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி 600 மாணவர்களை சேர்த்து சாதனை

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 600 மாணவர்களை சேர்த்து சாதனை எட்டப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளி 600   மாணவர்களை சேர்த்து சாதனை
X

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், 600 மாணவர்களை சேர்த்து சாதனை படைக்கப்பட்டதை அடுத்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சேலம் ஏற்காடு அடிவாரம் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கையில் புதுமையை புகுத்தி வருகின்றனர். பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பலவிதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்துகின்றன.

கடந்த 2017- 2018ம் ஆண்டு சுகாதாரமான கழிப்பிட வசதி, மின்னணு கல்வி, படைப்பாற்றல் திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர்,8 உதவி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒன்றாவது முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 425 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது நடப்பு ஆண்டில் 230 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 620 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, ஊர் மக்கள் பெருமைப்படுத்தினர். மேலும் 600வதாக சேர்ந்த மாணவர்கள் மூலமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Updated On: 16 July 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...