/* */

10 கி.மீட்டர் நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வார்டு உறுப்பினர்கள்

அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10 கி.மீட்டர் நடந்து புகார் அளித்த வார்டு உறுப்பினர்கள்.

HIGHLIGHTS

10 கி.மீட்டர் நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வார்டு உறுப்பினர்கள்
X

சேலம் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி என்பவர் பதவியேற்று 20 மாதங்களாகியும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம பொதுமக்கள் கேள்வி கேட்பதாக கூறி, 5 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆண்டிப்பட்டி கிராமத்திலிருந்து கோரிக்கை மனுக்களை கைகளில் ஏந்தியவாறு 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறிப்பாக 15வது நிதிக்குழு மூலம் ஊராட்சிகளுக்கு வர பெற்றுள்ள சுமார் 35 லட்சம் நிதி கிடப்பில் உள்ளது. அதனை எடுத்து ஆண்டிபட்டி கிராம மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு செலவிட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் ஆண்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள 9-வார்டு உறுப்பினர்களை சேர்ந்தவர்களை மக்கள் கேள்வி கேட்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் ஆண்டிபட்டி ஊராட்சியில் உள்ள கிராம மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Updated On: 17 Aug 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்