/* */

ஊரடங்கிலும் 'அடங்காதவர்கள்'... கட்டுப்படுத்த முடியாமல் சேலம் போலீசார் திணறல்

சேலம் மாநகரில், ஊரடங்கை மீறி உலா வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஊரடங்கிலும் அடங்காதவர்கள்...  கட்டுப்படுத்த முடியாமல் சேலம் போலீசார் திணறல்
X

சேலம் மாநகரில் ஊரடங்கை மீறி வெளியே திரியும் வாகன ஓட்டிகளை, விசாரித்து எச்சரித்து அனுப்பும் போலீசார். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதையடுத்து, சேலம் மாநகரம் உள்பட, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், போலீசார் தடுப்புகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஊரடங்கை மீறி, ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி, பலரும் வெளியே வருகின்றனர். அத்தையக நபர்களை பிடித்து விசாரித்து, உரிய காரணங்கள் இருந்தால் விடுவிப்பதும், தேவையின்றி திரிவது தெரிந்தால் அபராதம் விதிப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் ஊரடங்கை மீறி பலரும், பிரதான சாலைகளில் உலா வந்து கொண்டே இருக்கிறார்கள். போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டாலும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி, மருத்துவமனை, உணவகங்களுக்கு செல்வதாகக்கூறி, போலீசாரை ஏமாற்றி சாலைகளில் சுற்றித் திரிவது தொடர்கதையாகவே உள்ளது.

இதன் எதிரொலியால், முழு ஊடங்குக்கு முன்னால் ஒருநாள் பாதிப்பு 600, 700 ஆக இருந்தது தற்போது இருமடங்காக உயர்ந்து, 1200 முதல் 1500 வரை அதிகரித்துள்ளது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு எடுக்கும் முயற்சிக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நோய் பரவலுக்கு தீர்வே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Updated On: 2 Jun 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  2. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  3. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  4. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  5. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  6. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  7. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  8. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  9. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  10. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...