/* */

சேலத்தில் 151 சிசிடிவி கேமராக்களை தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்

சேலம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 151 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சேலம் மாநகர பகுதிகளில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாநகரில் முக்கிய பகுதியாக கருதப்படும் பள்ளப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 151 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாடுகளை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் உரையாற்றிய அவர், காவல்துறையினர் பொதுமக்களை எளிமையாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக வாகன ரோந்து பணிக்கு மாற்றாக நடைபயண ரோந்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது கண்ணாக கருதப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற வழக்குகள் துப்பு கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 25 Sep 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...