/* */

நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்க ளுக்கு பேருந்து சேவை தொடக்கம்

சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது

HIGHLIGHTS

நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்க ளுக்கு பேருந்து சேவை தொடக்கம்
X

நான்கு மாதங்களுக்கு பிறகு சேலம் கோட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது.

சேலம் கோட்டத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு பிறகு வெளிமாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்

கொரோனோவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த நான்கு மாதங்களாக பேருந்து போக்குவரத்து வெளிமாநிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் வெளி மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கியது. சேலம் கோட்டத்தில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாதேஸ்வரன் மலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முதற்கட்டமாக சேலத்திலிருந்து 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் இருபதுக்கு மேற்பட்ட பேருந்துகள் அரசு அறிவிக்கப்பட்ட பயணிகளுடன் பெங்களூருக்கு சென்றது. குறிப்பாக பேருந்துகளில் அனுமதிக்கப்படும் பயணிகள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகள் கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளின் வசதிக்கு ஏற்ப பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Aug 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்