/* */

காலில் விழுந்து கதறிய பெண்கள்: பதறிய கலெக்டர்- காரணம் இதுதான்

தூய்மையான குடிநீர் கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து பெண்கள் கதறி அழுததால், அங்கு பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

சேலம் எருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு காரணமாக, அப்பகுதியில் குடிநீர் மாசடைந்து, பல நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் பலர், மாசடைந்த குடிநீருடன், இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த ஆட்சியர் கார்மேகம் காலில், பெண்கள் அனைவரும் விழுந்து கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

குடிநீரை ஏற்படுத்தும் ஆலை மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். தூய்மையான குடிநீர் கிடைக்க வலியுறுத்தி பெண்கள் ஆட்சியர் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 22 Jun 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்