/* */

பேருந்து ஓட்டுனரை தாக்கும் ஆட்டோ ஓட்டுனர்

பேருந்து ஓட்டுனரை தாக்கும் ஆட்டோ ஓட்டுனர்
X

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் தனியார் பேருந்து ஓட்டுனரை கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதி எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் தனியார் நகர பேருந்து ஒன்று, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவதாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்து பால் மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்புறம் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்துவதற்காக, தனியார் பேருந்து ஓட்டுநர் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தார். இதனால் வெறுப்படைந்த ஆட்டோ ஓட்டுநர் திடீரென ஆட்டோவை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கி வந்து தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத பேருந்து நடத்துனர் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டார். இதனையடுத்து சக ஆட்டோ ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனரை இழுத்துச் சென்றனர்.

இதனால் சுமார் 1 மணிநேரம் ,அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் , தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கும் காட்சிகள் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 5 April 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  2. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  3. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  4. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  5. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  6. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  8. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  10. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...