/* */

கஞ்சா பழக்கத்தால் அக்கா கணவர் சுத்தியலால் அடித்துக் கொலை

கஞ்சா பழக்கத்தை கைவிடாத கூறிய அக்கா கணவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மைத்துனர் கைது.

HIGHLIGHTS

கஞ்சா பழக்கத்தால் அக்கா கணவர்  சுத்தியலால் அடித்துக் கொலை
X

கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கோகுல்நாத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இளம் வயதிலேயே பிரியதர்சினியின் தம்பி, பாலமுருகன் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானது குடும்பத்தினரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. பாலமுருகனின் செயலைக் கண்டித்து கஞ்சா போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோகுல்நாத் பலமுறை மைத்துனர் பாலமுருகனை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், இன்று அதிகாலை 5 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த சகோதரியின் கணவர் கோகுல்நாத்தை சுத்தியலால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சகோதரியின் கணவர் என்று கூட பார்க்காமல் கஞ்சா போதைக்கு அடிமை ஆனதால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கஞ்சா போதையிலிருந்த பாலமுருகனை உடனடியாக அவரது குடும்பத்தினர் பிடித்து வீட்டில் அடைத்து வைத்து பூட்டினர். இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்தனர்.

கோகுல்நாத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாலமுருகனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? கஞ்சா விற்பனையில் தொடர்புடைய கும்பல் எது? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On: 31 Aug 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்