/* */

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனோ உயிரிழப்புகள்

சேலத்தில், கொரோனோ உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; நேற்று ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனோ உயிரிழப்புகள்
X

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தினந்தோரும் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 5 நாட்களாக தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேர் உயிரிழந்ததாக, மாவட்ட சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று மட்டும் 547 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானாவுக்கு சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்ததாகவும் மாவட்ட சுகாதார சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தினந்தோறும் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அது இரு மடங்காக உயர்ந்திருப்பது சேலம் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரானா நோய்தொற்று ஏற்பட்டு 520 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 1 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’