/* */

வரதட்சணை கொடுமை: கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் இளம் பெண் புகார்

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இளம்பெண் மனு அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வரதட்சணை கொடுமை: கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் இளம் பெண் புகார்
X

வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்வதாகக்கூறி,  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இளம்பெண் பிரீத்தா.

தர்மபுரி மாவட்டம் திப்பிரெட்டிஹள்ளி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவரின் மகள் பிரித்தா என்பவருக்கும், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் வெங்கடேஸ் என்பவருக்கும், கடந்த ஜூன் 1 ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் கணவர் வீட்டில் வசித்து வந்த பிரித்தாவை, கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்தும் பிரித்தா ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பிரித்தா பெற்றேருடன் வந்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்திய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Updated On: 3 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...