Begin typing your search above and press return to search.
பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு... மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்!
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்படும் நிலையில், அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக உயர்ந்து இருந்தது. அணையின் நீர்இருப்பு - 60.78 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,181 கன அடியில் இருந்து 1,170 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, காவிரி டெல்டா பாசனத்திற்காக, இன்று காலை 10 மணி அளவில், மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைக்கிறார்.