/* */

சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது

மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேரைபோலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேலம் அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 7 பேர் கைது
X

மேட்டூர் ஜலகண்டாபுரத்தில், மதுபாட்டில் கடத்தல் குறித்து விசாரணை நடத்திய போலீசார். 

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்கத்து மாவட்டமான தர்மபுரியில் இருந்து சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்று மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வேல்முருகன், சதீஸ், செல்வராஜ், பிரகாஷ்,வேலு, செல்வம்,ரவிசங்கர் ஆகிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, 131 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், இரு சக்கர வாகனத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு மது வாங்க சென்ற ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 3 பேர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்