/* */

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை
X

சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இங்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற தனியார் நிறுவனம் வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்தது. தற்போது அனல் மின் நிலையத்தில் 850 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்நிறுவனம் முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் விலை, தரம் பற்றி ஆய்வு நடந்து வருகிறது. அனல்மின் நிலையத்திற்கும், தனியார் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள், கோப்புகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 20 Sep 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  4. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  6. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  7. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  8. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  9. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?
  10. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு