/* */

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
X

சேலம் நீதிமன்ற வளாகம்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லியகுந்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அங்கமுத்து (21). இந்த வாலிபர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரனை முடிந்த நிலையில் இன்று போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி முருகானந்தம் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அங்கமுத்துவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 20000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 6 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?