/* */

சேலத்தில் தொழில் நிறுவன சங்கங்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!

சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவன சங்கங்களின் குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

சேலத்தில் தொழில் நிறுவன சங்கங்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!
X

சேலத்தில் தொழில் நிறுவன சங்க நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் “கள் ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம், வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கம், லாரி கட்டுமான தொழில் நிறுவனங்கள் சங்கம், ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சங்கம், சிறுதானிய மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம், கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கம், மலையகப் பகுதி பழங்குடி மக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடலின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அரசு அளித்து வரும் அதரவு மற்றும் சலுகைகளுக்கு தங்களது நன்றிகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைத்திட ஏதுவாக இடஒதுக்கீடு மற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளுக்கான Peak Hour Charge மின் கட்டணத்தை குறைத்திட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.


ஓசூர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில், ஒசூரில் விமான நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். விவசாய சங்கங்களின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொடங்கிட வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு ஏற்படுத்த தேசிய அளவில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்புக் கூட்டம் நடத்திட உதவி செய்திட வேண்டும் என்றும், முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து தர வேண்டும் என்றும், வேளாண்மை தொடர்பான செய்திகளுக்காக "விவசாயிகள் பண்பலை" நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில், மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் தோல், நார் போன்ற கழிவுகளைக் கொண்டு இயற்கை எரிவாயு ஆலை அமைத்து தர வேண்டும் என்றும், ஏற்றுமதி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழ சாகுபடிக்கான தனித்துறையை உருவாக்கி தர வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரொக்க கடன் வட்டி மானியம் அளித்திடவும், சேகோ மற்றும் ஸ்டார்ச்க்கு குறைபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும், மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க சேகோசர்வ் மூலம் ஆராய்ச்சிக்கூடம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அனைத்து மாவட்ட அனைத்து பாடி பில்டர்கள் சம்மேளத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டையில் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக அனைத்து தொழிலங்களுக்கும் ஒரே வடிவமைப்பில் ஷெட் அமைக்கவும், தொழில் செய்ய உபகரணங்கள் வழங்கவும் நிதியுதவி அளித்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மலையகப் பகுதி பழங்குடி மக்கள் சார்பில், தங்கள் பகுதியில் சாலை வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர். பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.

மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்களது நன்றியை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மேலும் இத்தகைய நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 15 Feb 2023 5:03 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!