/* */

சேலத்தில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான முத்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ள குட முழுக்கு விழாவில் ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

சேலத்தில் கட்டப்பட்ட  உலகின் மிக உயரமான முத்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்
X

சேலம் அருகே மிக பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்ட உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோயில்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலைமுருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து, இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவிலை உருவாக்கிய தொழிலதிபர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: உலகிலேயே மிகப்பெரிய முருகன் கோயில் சேலத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோயிலில் மண்ணை எடுத்து வந்து ஆறுபடை முருகன் திருக்கோயில் சிறப்பு பூஜை செய்து பணியை துவக்கியதாகவும்,குறிப்பாக திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, சுவாமிமலை, பழனி போன்ற திருக்கோயில் மண்ணை கலசத்தில் வைத்து ஒரே நேரத்தில் பூஜை செய்து இந்த திருக்கோயில் வடிவமைத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மடாதிபதிகள் கலந்து கொண்டு ஆசி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.குறிப்பாக தருமாபுர ஆதீனம் பேரூர் ஆதினம் ரத்தனகிரி சாமிகள் மலேசியாவிலிருந்து பாலகிரிசாமி ஆகிய நான்கு மாடாதிபதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளதாகவும் தெரிவித்தார். கும்பாபிஷேகத்தை பொருத்தவரையில் சமூக இடைவெளி யோடு சுவாமி தரிசிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தீர்த்தம் அனைத்து பக்தர்களும் மீதும் விழும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் முருகனை ஹெலிகாப்டர் மூலம் அருகில் சென்று பார்க்க பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மிகப்பெரிய முத்துமலை முருகன் சாமி வேலி தரிசனம் செய்ய அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என வேண்டும் என்றும் முருகனின் அருள் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் கும்பாபிஷேகத்திற்கு பிறகு தொடர்ந்து பூஜைகள் நடத்த கட்டளைதாரர்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்த அவர், கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சேலம் அருகே மிக பிரம்மாண்ட முறையில் கட்டப்பட்ட உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் புனித தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?