/* */

சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் வரையறை பொதுமக்கள் ஏற்பு .

சோளிங்கர் நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை குறித்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வார்டுகள் வரையறை ஏற்கப்பட்டது

HIGHLIGHTS

சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் வரையறை பொதுமக்கள் ஏற்பு .
X

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியீடானது.அதனைத்தொடர்ந்து சோளிங்கர், நகராட்சியாக செயல்பட ஆணையர் நியமிக்கப்பட்டு 18வார்டுகளிலிருந்து 27வார்டுகளாக அதிகரித்து நகர எல்லை மற்றும் வார்டுகள் வரையறைப் பணிகள் நடந்தன. பின்னர் ,27 வார்டுகள் வரையறை செய்யப்பட்டு பட்டியலை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில் ,சோளிங்கர.-வாலாஜா சாலையில். வாசவி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் வார்டுகள் மறுவரையறைக் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சில அதிருப்திகள் எழுந்த போதிலும், பெரும்பாலானோர் வரையறைகளை ஏற்றுக்கொண்டனர். மேலும் 6 வார்டில் மட்டும் சில திருத்தங்கள் செய்யுமாறு பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தில் மண்டல இயக்குநர் நகராட்சிகள் குபேந்திரன், நகராட்சி் ஆணையர் பரசுராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியளர் உள்ளாட்சி தேர்தல் மரியம் ரெஜினா, வட்டாட்சியர் வெற்றிக்குமார் உட்பட பொதுமக்கள் பலர. கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்