/* */

சோளிங்கர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி

சோளிங்கர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி.

HIGHLIGHTS

சோளிங்கர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி
X

திருவள்ளூர் மாவட்டம் வீராணத்தூரை சேர்ந்தவர் அவரது மகன் நரேஷ். அவர் பைக்கில் வாலாஜாவிற்கு சென்று திருவள்ளூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள பெருங்காஞ்சி ஏரிக்கரையில் பைக் வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் பைக்கில் வந்த நரேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார் . உடனே அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இவ்விபத்து குறித்து கொண்டபாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.

Updated On: 20 Jun 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  2. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!