/* */

வாலாஜா அருகே மின்கம்பத்தில் வேன்மோதி கவிழ்ந்தது. பெண்கள் 16 பேர் உயிர் தப்பினர்

வாலாஜாப்பேட்டை அருகே மின்கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்ததில், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் பெண்கள் 16 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

HIGHLIGHTS

வாலாஜா அருகே மின்கம்பத்தில் வேன்மோதி கவிழ்ந்தது. பெண்கள் 16 பேர் உயிர் தப்பினர்
X

வாலாஜா அருகே மின்கம்பத்தில் வேன்மோதி கவிழ்ந்தது. 

வாலாஜாப்பேட்டை அருகே உள்ள அனந்தலை ஜெபிநகர் பகுதி பெண்கள் வேன் மூலமாக வேலைக்கு இராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் கம்பெனிக்கு சென்று வருகின்றனர். அதன்படி காலை வழக்கம்போல பெண்கள் வேனில் அனந்தலையிலிருந்து இராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர் .

வேனை சரத் என்பவர் ஓட்டி வந்தார். அனந்தலை திருப்பத்தில் திரும்பிய போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வயலோரமிருந்த மின் கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்தது,

அதே நேரத்தில், விபத்து காரணமாக மின் கம்பமும் ஓடிந்து விழுந்தது . அப்போது சம்பவத்தைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனே ஓடிச்சென்று மின் இணைப்பைத் துண்டித்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு வேனில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இவ்விபத்து குறித்து வாலாஜாப்போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 July 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  2. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  3. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  7. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  8. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்