Begin typing your search above and press return to search.
கலவையருகே பறிமுதல் செய்த ரூ1கோடி மதிப்புள்ள எரிசாராயம் அழிப்பு
கலவையருகே செய்யாத்து வண்ணத்தில் பதுக்கி இருந்த 17500லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்த மதுவிலக்குப் போலீஸார் தீயிட்டு அழித்தனர்
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த செய்யாத்து வண்ணம் கிராமத்தில் பதுக்கிவைத்திருந்த ரூகோடிமதிப்பில் 497 கேன்கள் 17,395 லிட்டர் எரிசாராயத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இராணிப்பேட்டை மதுவிலக்குப் போலீசார் பறிமுதல் செய்தனர் .
இந்நிலையில்,மாவட்ட கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் வட்டாட்சியர் நடராஜன் ராணிப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரபுமற்றும் கலால் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சப்இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், 20க்கும் மேற்பட்ட காவலர்கள் வாலாஜா அடுத்த அனந்தலையிலுள்ள மலை அடிவாரத்தில் உள்ள பள்ளம் தோண்டி அதில் பறிமுதல் செய்ப்பட்ட எரிசாராயம் அனைத்தையும் ஊற்றி தீவைத்து எரித்து அழித்தனர் .
மேலும் தீ பரவாமல் இருக்க முன்னேற்பாடுகளுடன் இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினர் உடனிருந்தனர்.