இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1293 பேர் வேட்பு மனுதாக்கல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 1293பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதாக கலெக்டர் அறிவிப்பு
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க நகர்புற ஊள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களிடமிருந்து கடந்த 28ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் இன்றோடு 1293 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில் மனுக்கள் பெறப்படும் பணிகள் நிறைவடைந்ததாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலரான பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதில் மாவட்டத்தில் உள்ள6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளின் வார்டுகளில் போட்டியிட மொத்தம் 1293 மனுக்கள் பெறப்பட்டுள்ளன
அரக்கோணம் நகராட்சியில் - 216,
ஆற்காட்டில் -116,
மேல்விஷாரத்தில் - 137,
இராணிப்பேட்டை -126,
சோளிங்கர் - 167,
வாலாஜா -,88
மற்றும் பேரூராட்சிகளான
அம்மூர் - 70,
கலவை. -49,
காவேரிப்பாக்கம் - 64,
நெமிலி. - 53,
பணப்பாக்கம்.- 44 ,
தக்கோலம். -,65,
திமிரி. -56,
விளாப்பாக்கத்தில் -46
என நகராட்சிகளில் மொத்தம் 846 மனுக்களும் பேரூராட்சிகளில் மொத்தம் 447 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.