கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை தேவை: தமிழிசை

சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என இரத்தினகிரி வந்திருந்த தமிழிசை சௌந்தராஜன் கூறினார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை தேவை:  தமிழிசை
X

ரத்னகிரி கோவிலுக்கு வந்திருந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் பாலமுருகன் கோயில் அறங்காவலர் மற்றும் நிர்வாகியுமான பாலமுருகனடிமை சாமிகளின் 55வது ஆண்டு மெய்ஞானவிழா நடந்தது .

விழாவில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்பு பாலமுருகனடிமை சாமிகளிடம் ஆசிபெற்றார். .

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நாம் அனைவரும் தடுப்பு விதிகளான முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்கவேண்டும். 60 வயதுள்ளவர்கள் பூஸ்டர் ஊசி போடவேண்டும். முதன்முதலாக 12 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசிப்போட்டுக் கொண்டு எச்சரிக்கையிடன் இருக்கவேண்டும் என்றார்

தமிழகமீனவர்கள் மீது இலங்கை அரசின் தாக்குதல் குறித்து கேட்டதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். உக்ரைன் தாக்குதலில் பாதிப்புகளின்றி நம்மவர்களை பத்திரமாக மீட்ட பெருமைக்குரியவர். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.

முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் எஸ்பி தீபாசத்தியன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்

Updated On: 20 March 2022 3:59 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ்: பயன்படுத்தும் முறை
  3. ஈரோடு
    பவானி, அந்தியூரில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் 97 தீர்மானங்கள் ஏகமனதாக
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் நினைவுதினத்தையொட்டி நல திட்ட...
  6. நாமக்கல்
    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ....
  7. திருப்பூர்
    திருப்பூரில் 49-வது சர்வதேச அளவிலான நிட் ஃபேர் கண்காட்சி துவக்கம்
  8. தேனி
    சென்னை- பெங்களூரு ஹைப்பர் லுாப் ரயில் ஆய்வு
  9. குமாரபாளையம்
    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  10. விழுப்புரம்
    இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்