/* */

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு

HIGHLIGHTS

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்
X
பைல் படம்

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் பெட்டிகளில் அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்ததை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அந்த நபரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி, ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர் கொண்டு வந்த பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் பெயர் நாகராஜ் என்றும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தங்கம் வாங்கி வந்து கோவையில் தங்க வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்த அவரிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீசார் சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Updated On: 21 Aug 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்