/* */

இராமநாதபுரம் மீனவர் குவைத் கடலில் மூழ்கி உயிரிழப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மீனவர் குவைத் கடலில் மூழ்கி உயிரிழப்பு
X

குவைத் கடலில் மூழ்கி பலியான இராமநாதபுரம் மீனவர் கண்ணுச்சாமியின் அடையாள அட்டை.

இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி 43, குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கண்ணுச்சாமி இரு ஆண்டுகளுக்கு முன் குவைத் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார். ஏப். 2 மீன் பிடிப்படகில் சென்ற போது கேப்டனின் அலைபேசி கடலில் தவறி விழுந்தது. அதை எடுக்க கண்ணுச்சாமி கடலில் குதித்தார். இரண்டு முறை கீழே போய் தேடி விட்டு மேலே வந்தார். மூன்றாவது முறையாக கடலில் மூழ்கியவர் பலியானார். நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது. கண்ணுச்சாமிக்கு மனைவி வனிதா 31, மகன் கஜேந்திரன் 13, மகள்கள் கீதா 11, பிரீத்தா 9, உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  6. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  9. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்