/* */

இராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1கோடி வைரம் கருவூலத்தில் ஒப்படைப்பு

இராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1கோடி வைரம் கருவூலத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1கோடி வைரம் கருவூலத்தில் ஒப்படைப்பு
X

கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட வைரம்.

இராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள பட்டைதீட்டப்படாத வைரக்கற்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கீழக்கரை புது கிழக்குத்தெரு முகம்மது காசிம் மகன் யூசுப் சுலைமான் (வயது36) என்பவரை பிடித்து விசாரித்தபோது தான் ஒரு வியாபாரி என்றும் உரிய ஆவணம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதன்பிறகு அவர் உரிய ஆவணத்துடன் வரவில்லை. இந்நிலையில் இந்த வைரக்கற்களை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தபோது சுங்கத்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து வைரம் தான் என்றும் ஆனால் அதிக விலைமதிக்கத்தக்க வைரம் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், கடல்பகுதியில் வைத்து பறிமுதல் செய்தால்தான் தாங்கள் பெற்றுச்சென்று விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரெயில்வே கேட் பகுதியில் வைத்து கைப்பற்றியதால் தங்கள் கட்டுப்பாட்டில் வராது என்றும், கடல்வழியாக கடத்தி வந்ததாக வழக்குபதிவு செய்து தந்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே விலை உயர்ந்த வைரக்கற்கள் என்பதாலும் உரிய ஆவணத்துடன் வருவதாக கூறி சென்றவர் வராததாலும் இதில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் நபர்கள் தலைமறைவாகிவிட்டதாலும் இந்த வைரக்கற்களை போலீசார் வைத்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து உரிய வழிமுறைகளின்படி இந்த வைரக்கற்களை நேற்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். இந்த வைரக்கற்கள் முறைப்படி கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் உரிய ஆவணத்துடன் வந்து சமர்ப்பித்தால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான வைரக்கற்கள் யாரும் உரிமைகோர வராமல் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 April 2022 4:20 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்