ஏடிஎம்களில் பணம் இல்லை. மக்கள் அவதி.
தொண்டியில் அனைத்து ஏடிஎம்களில் பணம் இல்லாததால்வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஒவர்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி என நான்கு வங்கிகள் செயல்படுகிறது. இந்த வங்கிகளின் அருகே இதன் ஏடிஎம்களும் கடைவீதிகளில் இந்தியா 1 மற்றும் ஹிட்டச்சி என இரண்டு தனியார் ஏடிஎம்கள் என மொத்தம் 6 ஏடிஎம்கள் உள்ளது.
கடந்த 3 நாட்களாக தனியாருக்கு ஏடிஎம்கள் தவிர மற்ற அனைத்து ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள் பணம் எடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் நாளை ரம்ஜான் பண்டிகை வருவதால் அதற்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
எனவே அனைத்து ஏடிஎம்களிலும் பணம் நிரப்ப வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.