/* */

அதிரடி சோதனை: உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா, கோழிக்கறி பறிமுதல்

உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையின் போது, இராமநாதபுரம் மாவட்ட உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா பறிமுதல்.

HIGHLIGHTS

அதிரடி சோதனை: உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் சவர்மா, கோழிக்கறி பறிமுதல்
X
இராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவுறுத்தலை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி தர்மர் தலைமையில் இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தேவிபட்டினம் சாலை, சின்னக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் பகுதியில் சவர்மா, கெட்டுப்போன கோழிக் கறிகளையும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து கடை உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டனர். கேரளாவில் பெண் ஒருவர் சவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மற்றும் சோதனை நடத்தி அழுகிய பொருட்களை பறிமுதல் செய்தனர். கெட்டுப்போன உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Updated On: 7 May 2022 9:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்