/* */

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு,முதல்வர் உறுதி
X

தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 11 ஏழை குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கினார். தொடர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது,தமிழக அரசு விவசாயத்திற்கு தான் முன்னுரிமை அளித்து வருகிறது.அனைத்து ஏரி, குளம் கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு கோடை காலத்தில் தேவையான நீரை தற்போதே தேக்கி வைத்திருக்கிறோம். காவேரி குண்டாறு இணைப்பிற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. காய்கனிகள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் அதை பாதுகாப்பாக வைக்கும் குளிரூட்டப்பட்ட அறை அமைக்கப்படும்.

அதில் அதிகப்படியான காய்கனிகள் உற்பத்தி ஆகும் போது இந்த அறையில் வைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 75000 கோடி ரூபாய் முதலீட்டில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 2 Jan 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...