/* */

கமுதி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப சாவு: இருவர் படுகாயம்

கமுதி அருகே வயலில் பருத்தி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

கமுதி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப சாவு: இருவர் படுகாயம்
X

உயிரிழந்த கற்பகவள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் பருத்தி எடுத்துக்கொண்டிருந்த போது மழை மற்றும் இடி மின்னல் தாக்கியது. அப்போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நெறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகசெல்வம் மனைவி கற்பகவள்ளி (25) என்பவர் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த சண்முகவேல் மனைவி அருணாச்சலம் (35), பாக்கியராஜ் மனைவி முத்துலட்சுமி (28) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 6:07 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்