/* */

ராமநாதபுரத்தில் வாக்கு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொறுத்தும் பணி கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் பொது பார்வையாளர் விசோப் கென்யே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்

HIGHLIGHTS

ராமநாதபுரத்தில் வாக்கு இயந்திரத்தில்  பெயர், சின்னம் பொறுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
X

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வருகின்றன 6ம் தேதியன்று அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் வாக்கு பதிவிற்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டு கட்ட கணினி முறை ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 16 பட்டன்களில் மட்டுமே வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்ய இயலும். இந்நிலையில் பரமக்குடி தொகுதியில்; 15, இராமநாதபுரம் தொகுதியில் 19, திருவாடானை தொகுதியில் 15, முதுகுளத்தூர் தொகுதியில் 23 என்ற வீதத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அந்தவகையில் முதுகுளத்தூர் மற்றும் இராமநாதபுரம் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குச்செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சின்னங்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம், முதுகுளத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்பு கிட்டங்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொறுத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Updated On: 31 March 2021 8:27 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  5. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  7. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  8. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  9. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  10. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு