/* */

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது

HIGHLIGHTS

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது
X

புதுக்கோட்டை அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே முள்ளூர் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரான ஈஸ்வரன் என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் ஈஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...