12 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய விருத்தி தொண்டு நிறுவனம்
மருத்துவ உபகரணங்களான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் விருத்தி தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
பெங்களுர் கேடலிஸ்ட் குழுமத்தின் விருத்தி மற்றும் ஸ்வஸ்தி நிறுவனங்களின் வழிகாட்டுதலில், கிவ்இந்தியா நிறுவனத்தின் உதவியோடு, புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதார பணிகளுக்கு உதவி செய்யும் நோக்கில் மருத்துவ உபகரணங்களான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் 10 மற்றும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையேற்று 8 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கும் வழங்கினார்.
விழாவில் நபார்டு வங்கி மேலாளர் ஜெயஸ்ரீ, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், ஆலங்குடி மருத்துவமனை தலைமை மருத்துவர் பெரியசாமி மற்றும் வேளாண் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விருத்தி நிறுவன அலுவலர் நாராயணசாமி கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.