Begin typing your search above and press return to search.
சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் நல்லூர் டோல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் டோல் சாலை ஓரம் மணிபர்ஸ் ஒன்றை பார்த்த கீரனூர் ஆய்வாளர் இளையராஜா மணிபர்சை எடுத்தார்.
பர்சில் உரிமையாளரின் போன் நம்பர் மற்றும் முகவரி இருந்தது. உடனடியாக ஆய்வாளர் இளையராஜா அவருடைய செல்போனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பர்ஸியின் உரிமையாளரான நல்லூரை சேர்ந்த கருணாகரன் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, போலீஸ் ஆய்வாளர் இளையராஜா மணிபர்சை உரிமையாளரிடம் கொடுத்தார். இதனை வாங்கிக் கொண்டு உரிமையாளர் கருணாகரன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.