புதுக்கோட்டை வரதராஜப் பெருமாள் கோவிலில் உழவாரப்பணி
புதுக்கோட்டை வரதராஜப் பெருமாள் கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உழவாரப்பணி துவக்கம்
HIGHLIGHTS
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்டம், புதுக்கோட்டை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை இணைந்து கீழ 3ஆம் வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் 3ஆம் ஆண்டு உழவாரப்பணி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மைக் குழு உறுப்பினர் மாருதி கண.மோகன்ராஜா தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் சுப்பையா செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சந்திரசேகர், நகரச் செயலாளர் க.நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க துணை தலைவர் இப்ராஹீம் பாபு, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தூய்மைப் பணியினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கணேசன், தட்டாம்பட்டி ஆறுமுகம், பீர் முகமது, நிலைய உதவி அலுவலர் விஜயகுமார், தட்டச்சர் கமலாதேவி முன்னிலை வகித்தனர். நிறைவாக கோயில் குருக்கள் பாலாஜி நன்றி கூறினார்