/* */

நேரடி தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

இந்த ஆண்டில் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் கற்றுத் தரப்பட்டதால் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும்

HIGHLIGHTS

நேரடி  தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத்   தெரிவித்து  மாணவர்கள் போராட்டம்
X

ஆன்லைனில் பாடங்களை நடத்தி விட்டு ஆஃப்லைனில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னர் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி விட்டு தற்போது ஆஃப்லைனில் தேர்வு செய்ததை கண்டித்தும் ஆன்லைன் வாயிலாகவே தேர்வை நடத்த வேண்டும் என்று கூறிய புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைவானதால் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் ஆஃப்லைனில் (நேரடியாக) நடத்தப்படும் என்று பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் கற்றுத் தரப்பட்டது. இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆஃப்லைனில் தேர்வுகள் நடத்தப்பட கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 16 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது