/* */

புதுக்கோட்டை நகரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகர பகுதியில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகளை அதிகாரிகள் பறிமுதல செய்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை நகரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
X

தமிழகம் முழுவதும் நெகிழிப் பைகளை தடை செய்வதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மஞ்சப்பை இயக்கம் என ஒரு திட்டத்தை துவக்கி வைத்து அனைவரும் மஞ்சப்பை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழ்நாடு முழுவதும் நெகிழிப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் மருந்து கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை மறைத்து வைத்திருந்த கடைகளிலிருந்து ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு டன் நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து நெகிழிப் பைகளை கடைகளில் வைத்திருந்த கடைகளுக்கு மொத்தமாக 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Updated On: 5 Jan 2022 4:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்