/* */

புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கியது

புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே ரோட்டரி சங்கம் நோயாளிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கியது
X

புதுக்கோட்டை அருகே நோயாளிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் எம்எல்ஏ முத்துராஜா ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினார்.

புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் வசிக்கும் பிரபாகரன் என்ற இளைஞருக்கு கொரானோ நோய்த் தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

தற்போது அவருக்கு நோய்தொற்று நீங்கி விட்டது ஆனாலும் நுரையீரல் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மருத்துவர்கள் ஆலோசனையின் பெயரில் வீட்டுக்கு சென்ற பின்னும் ஆக்சிஜன் சுவாசிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்

ஆனால் அவர்களிடம் அந்த அளவுக்கு வசதி இல்லாததால் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவிடம் அவரது பெற்றோர்கள் கோரிக்கையாக தெரிவித்தனர்

அதனை ஏற்ற சட்ட மன்ற உறுப்பினர் ரோட்டரி அமைப்புகளை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதால் புதுக்கோட்டை கிங்டவுன் ரோட்டரி சங்கத்தினர் சார்பாக 5 எல்பிஎம் திறன் கொண்ட ஆக்சிஜன் செறிவூட்டியை வாடகையில்லாமல் பிரபாகரனுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படும் காலம் வரை உபயோகப்படுத்திக் கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கைலாசம் அவரது பெற்றோர்களிடம் ஆக்சிஜன் செறிவூட்டியை வழங்கினார்

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர் கான்அப்துல் கபார்கான், நகர கழக செயலாளர் நைனாமுகம்மது, ரோட்டரி நிர்வாகி மாருதி மோகன்ராஜா, மற்றும் சங்க உறுப்பினர் அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 14 Jun 2021 12:41 PM GMT

Related News