/* */

ஏப். 29 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

ஏப். 29 -ல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29.04.2022 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வருகிற 29.04.2022-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் அனைவரும்; முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Updated On: 26 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்