Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 8 பேர் கரும்புஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு திருச்சி மதுரை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இதுவரையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்து வந்த நிலையில் இன்று கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளக்கொல்லையைச் சேர்ந்த செல்வராஜ்(55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான வெள்ளகொள்ளைக்கு கொண்டு வரப்பட்டு அறந்தாங்கி நகராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.