Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
புதுக்கோட்டையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். அப்போது சட்டத்தின் நகலை எரிக்க முயன்றனர். போலீசார் சட்ட நகலை எரிக்க விடாமல் போராடி அவர்களிடம் இருந்து நகலை பறித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.